- வாய்மையே வெல்லும்
விலங்கு
அடி சாகஸக்காரி
உன் கன்னக்கோல் சிரிப்பால்
களவு போகிறது என் உறக்கம்.
உன் விழியின் சின்ன அசைவிலும்
விரிசல் காணுகிறது
என் வீர்யம்.
எந்தக் கலை பண்பாட்டிலும்
காண முடியாத அடவுகளை
அடக்கியாளுகிறது
உன் நடை.
குயிலும் யாழும் சிட்டுக்குருவியும்
கூடு கட்டும்
உன் தொண்டைக் குழியிலிருந்து
நித்தமும்
நவ நவமாய்
நழுவி விழுகிறது சிம்பொனி.
உன் பாதக் கொலுசுகளிடம்
பணயம் வைக்கிறேன்
என் கர்வத்தை.
கை விலங்கு கால் விலங்கு
கேள்விப் பட்டிருக்கிறேன்,
நீ எனக்கு..
மெய் விலங்கை அல்லவா
மெய்யாகவே பூட்டிவிட்டாய்?
உன் கன்னக்கோல் சிரிப்பால்
களவு போகிறது என் உறக்கம்.
உன் விழியின் சின்ன அசைவிலும்
விரிசல் காணுகிறது
என் வீர்யம்.
எந்தக் கலை பண்பாட்டிலும்
காண முடியாத அடவுகளை
அடக்கியாளுகிறது
உன் நடை.
குயிலும் யாழும் சிட்டுக்குருவியும்
கூடு கட்டும்
உன் தொண்டைக் குழியிலிருந்து
நித்தமும்
நவ நவமாய்
நழுவி விழுகிறது சிம்பொனி.
உன் பாதக் கொலுசுகளிடம்
பணயம் வைக்கிறேன்
என் கர்வத்தை.
கை விலங்கு கால் விலங்கு
கேள்விப் பட்டிருக்கிறேன்,
நீ எனக்கு..
மெய் விலங்கை அல்லவா
மெய்யாகவே பூட்டிவிட்டாய்?
நான்
பருவப்பாவு
நெய்தென்னை
முச்சந்தியில்
'தொங்கவிட
வசீகரித்து
வாங்கி உடுத்தியவளின்..
இடது மார்பில் கிழிந்து
அவள்
தூக்கி எரிந்த பெட்டிக்குள்
அவளைக்
கட்ட முடியாத
புடவையாக நான்!
நெய்தென்னை
முச்சந்தியில்
'தொங்கவிட
வசீகரித்து
வாங்கி உடுத்தியவளின்..
இடது மார்பில் கிழிந்து
அவள்
தூக்கி எரிந்த பெட்டிக்குள்
அவளைக்
கட்ட முடியாத
புடவையாக நான்!
மனமே
என்னில் உன்னை
விதைத்த
விழாக் காலத்திற்குப் பிறகான
விபரீதங்களை
விவரித்தாக வேண்டும் நான்,
விழிகளை.. செவிகளை.. உயிரை..
ஊடுருவிய..
வயிற்றின் பசி..
உன் பிம்பம் கண்டும்..
குரல் கேட்டும்
அடங்கிப்போன அதிசயம்.
தனிமை இருட்டின்
அடர் வண்ணம் தொட்டு
படுக்கை விரிப்பெங்கும்..
உறக்கம் பிடிக்காத
உடல் தூரிகையால்
புரண்டு.. புரண்டு..
வரைந்த் சித்திரங்கள்..
உன் நினைவு லாயத்தில்
சுருள
எண்ணப் பொதி சுமக்கும்..
மனம்..
குரும்பாடாய்.. பட்டிக்குத் திரும்பும்
யதார்த்தம்.
விதைத்த
விழாக் காலத்திற்குப் பிறகான
விபரீதங்களை
விவரித்தாக வேண்டும் நான்,
விழிகளை.. செவிகளை.. உயிரை..
ஊடுருவிய..
வயிற்றின் பசி..
உன் பிம்பம் கண்டும்..
குரல் கேட்டும்
அடங்கிப்போன அதிசயம்.
தனிமை இருட்டின்
அடர் வண்ணம் தொட்டு
படுக்கை விரிப்பெங்கும்..
உறக்கம் பிடிக்காத
உடல் தூரிகையால்
புரண்டு.. புரண்டு..
வரைந்த் சித்திரங்கள்..
உன் நினைவு லாயத்தில்
சுருள
எண்ணப் பொதி சுமக்கும்..
மனம்..
குரும்பாடாய்.. பட்டிக்குத் திரும்பும்
யதார்த்தம்.
ஆசை முகம்
நீ ஏறிவிட்டதாய்ச் சொன்ன
பேருந்தின் வருகைக்குக்
காத்திருந்த நிமிடங்களின்
வலி பற்றி..
உன்னிடம்..
என்றுமே.. சொன்னதில்லை நான்
நின்று போகும்..
ஒவ்வொரு பேருந்திலும்..
நீ இருக்கக்கூடும்..
என்கிற தவிப்பும்..,
இறங்குகிற கால்களில்..
உன் தடயம் தேடும் குறுகுறுப்பும்..
அன்னியப்பட்டு
எனக்குகந்த.. உன் நிறத்தில்
ஆடையணிந்த மனுஷிகளிடை..
உன்னைக் காணாத ஏமாற்றமும்..
உயிரில் செருகும் கத்திகளை!
உன் வருகைக்குப் பிறகு..
குளிர்பானம் பருகுகையில்
நீ வந்த பேருந்தைவிடப்
பத்து மடங்கு
நான் வேகமாய் இருப்பதாய்
நீ பேசிச் சிரிக்கையில்..
என்னிடம் சொல்லிக்கொண்டு
நீ கிளம்பப்போகும்
பேருந்து பற்றிய
வேதனையில் நானிருப்பதை
என்றாவது அறிவாயா நீ?
நான் உடன் வராத
தனித்த உன் பயணங்களில்..
என்றாகிலும் நீ
ஜன்னலோரத்தில் எட்டிப் பார்க்கையில்
கண்டுகொள்ளக்கூடும்..
அதே பேருந்தில்..
தொங்கிக்கொண்டு வரும் என் நேசத்தை!
பேருந்தின் வருகைக்குக்
காத்திருந்த நிமிடங்களின்
வலி பற்றி..
உன்னிடம்..
என்றுமே.. சொன்னதில்லை நான்
நின்று போகும்..
ஒவ்வொரு பேருந்திலும்..
நீ இருக்கக்கூடும்..
என்கிற தவிப்பும்..,
இறங்குகிற கால்களில்..
உன் தடயம் தேடும் குறுகுறுப்பும்..
அன்னியப்பட்டு
எனக்குகந்த.. உன் நிறத்தில்
ஆடையணிந்த மனுஷிகளிடை..
உன்னைக் காணாத ஏமாற்றமும்..
உயிரில் செருகும் கத்திகளை!
உன் வருகைக்குப் பிறகு..
குளிர்பானம் பருகுகையில்
நீ வந்த பேருந்தைவிடப்
பத்து மடங்கு
நான் வேகமாய் இருப்பதாய்
நீ பேசிச் சிரிக்கையில்..
என்னிடம் சொல்லிக்கொண்டு
நீ கிளம்பப்போகும்
பேருந்து பற்றிய
வேதனையில் நானிருப்பதை
என்றாவது அறிவாயா நீ?
நான் உடன் வராத
தனித்த உன் பயணங்களில்..
என்றாகிலும் நீ
ஜன்னலோரத்தில் எட்டிப் பார்க்கையில்
கண்டுகொள்ளக்கூடும்..
அதே பேருந்தில்..
தொங்கிக்கொண்டு வரும் என் நேசத்தை!
